ADDED : செப் 22, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி:செம்மஞ்சேரி, ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார், 26; தனியார் நிறுவன ஊழியர். நாவலுார் நோக்கி ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்
ஓ.எம்.ஆர்., பழத்தோட்ட சாலை சந்திப்பில் திரும்பும்போது, நாவலுாரில் இருந்து பழத்தோட்ட சாலை சந்திப்பில், 'யு - டர்ன்' செய்த குடிநீர் லாரி மோதி, அஜித்குமார் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுனர் சக்திவேல், 32, என்பவரை கைது செய்தனர்.