/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் வந்த கை எழும்பூரில் பரபரப்பு
/
ரயிலில் வந்த கை எழும்பூரில் பரபரப்பு
ADDED : மார் 04, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழும்பூர்,:டில்லியில் இருந்து தாம்பரத்திற்கு 'ஜிடி' ரயில் நேற்று முன்தினம் வந்தது. பயணியரை இறக்கிவிட்ட பின், எழும்பூர் நிலையத்திற்கு ரயில் வந்தது. அங்கு, ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, இன்ஜின் பகுதியில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று இருப்பதை கண்டு, ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து, உடனடியாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், துண்டிக்கப்பட்ட கையை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

