/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர்
/
தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த கன்டெய்னர்
ADDED : பிப் 14, 2024 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடுசென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து, தனியார் 'ஆன்லைன்' நிறுவனத்திற்கு காய்கறி ஏற்றி 'கன்டெய்னர்' லாரி சென்றது.
லாரியை ஆசை தம்பி, 32, என்பவர் ஓட்டினார். வேலப்பன்சாவடி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.
விபத்தால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், இரண்டு ராட்சத, 'கிரேன்'கள் உதவியுடன், இரண்டு மணி நேரம் போராடி லாரியை அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக, லேசான காயங்களுடன் ஓட்டுனர் உயிர் தப்பினார்.

