sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூடப்படாத 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்

/

மூடப்படாத 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்

மூடப்படாத 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்

மூடப்படாத 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் 6 மாதங்களாக மாநகராட்சி அலட்சியம்


ADDED : ஜூலை 10, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலம், 52வது வார்டு, ஸ்டேட் பாங்க் காலனி - கைலாசபுரம் சந்திப்பில், பாதாள சாக்கடை 'பம்பிங் ஸ்டேஷன்' குழாய் உள்ளது.

ஸ்டேட் பாங்க் காலனி, பிருந்தாவன் காலனி, கைலாசபுரம் 1, 2, 3 தெருக்கள் ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர், இந்த பம்பிங் குழாய் வழியாக வெளியேறுகிறது.

ஆறு மாதத்திற்கு முன், இந்த குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்காக, மேற்பகுதியில் இருந்த மேன்ஹோலை உடைத்தனர்.

மோட்டார் சரிசெய்த பின், புதிய மேன்ஹோல் அமைத்து மூடாமல், கற்களை கொண்டு மூடி அப்படியே விட்டு விட்டனர். அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலையில், இந்த பள்ளத்தால் நாள்தோறும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதே நிலை நீடித்தால், இரவில் பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விழுந்து, உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், 'பம்பிங் ஸ்டேஷன்' குழாயை முறையாக மூட, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us