sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

/

11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

2


ADDED : அக் 18, 2024 12:28 AM

Google News

ADDED : அக் 18, 2024 12:28 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,

சென்னையில் தொடர் கனமழை முடிவுக்கு வந்தும், தாழ்வான 11 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்காக, மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மழைநீர் வடிகால்களில் குப்பை அடைப்பால், பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.

இதனால், கடந்த காலங்களில் மழைநீர் தேங்காத பிரதான சாலைகளிலும், இந்தாண்டு மழைநீர் தேங்கியது.

குறிப்பிட்ட இடங்களில், குறுகிய நேரத்தில், 20 முதல் 25 செ.மீ., மழை பெய்தது. சென்னையில், சராசரி 15 செ.மீ., மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், 542 இடங்களில் மழை நீர், 4 அடி வரை தேங்கியது.

நேற்று முன்தினம் முதல் மழை நின்றதால், நீர் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அதன்படி, நேற்று மாலை வரை, 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. பள்ளிக்கரணை, படாளம், செங்குன்றம் உள்ளிட்ட, 11 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி தொடர்கிறது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''தாழ்வான பகுதிகளில்தான் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு, மழைநீர் வெளியேற்றும் பணி தொடர்கிறது. விரைவில், அங்கு இயல்பு நிலை திரும்பும்,'' என்றனர்.

மழை பாதித்த பகுதிகளில்

14,500 டன் குப்பை அகற்றம்

சென்னை மாநகராட்சி பகுதியில், 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிந்த இடங்களில், வெளிமாவட்டங்களை சேர்ந்த, 500 துாய்மை பணியாளர்கள் உட்பட, 24,000 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன்படி, 14ம் தேதி அன்று, 48.33 லட்சம் கிலோ குப்பை, 84,000 கிலோ மரக்கழிவு; 15ம் தேதி 45.24 லட்சம் கிலோ குப்பை, 65,000 கிலோ மரக்கழிவு; 16ம் தேதி 48.46 லட்சம் கிலோ குப்பை, 95,000 கிலோ மரக்கழிவு என, மூன்று நாட்களில் சராசரியாக, 2.44 லட்சம் கிலோ மரக்கழிவு உட்பட, 1.45 கோடி கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து மரக்கழிவு மற்றும் குப்பை அகற்றும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us