/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்கு தினமும் விதவிதமான உணவு ரூ.64 கோடி செலவு செய்கிறது மாநகராட்சி
/
துாய்மை பணியாளர்களுக்கு தினமும் விதவிதமான உணவு ரூ.64 கோடி செலவு செய்கிறது மாநகராட்சி
துாய்மை பணியாளர்களுக்கு தினமும் விதவிதமான உணவு ரூ.64 கோடி செலவு செய்கிறது மாநகராட்சி
துாய்மை பணியாளர்களுக்கு தினமும் விதவிதமான உணவு ரூ.64 கோடி செலவு செய்கிறது மாநகராட்சி
ADDED : நவ 11, 2025 12:32 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில் பணியாற்றும், 31,373 துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ஆண்டுக்கு, 64.73 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. அவர்கள் மூன்று வேளையும் வழங்கப்படும் உணவு விபரங்களையும் மாநராட்சி வெளியிட்டுள்ளது.
துாய்மை பணியாளர் தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், ஒப்பந்த துாய்மை பணியாளர்களை சமாதானப்படுத்தும் வகையில், அவர்களுக்கு சம்பளம், 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்று வேளையும் உணவு வழங்கப்படும் எனவும், அரசு அறிவித்தது.
உணவு வழங்கும் திட்டம், வரும் 15ம் தேதி துவக்கப்பட உள்ளது. சுகாதார அலுவலர்கள், திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென் னையில், 31,373 துாய்மை பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். இதில், 24,417 பேருக்கு மதிய உணவு, 1,538 பேருக்கு இரவு உணவு, 5,418 பேருக்கு காலை உணவும் வழங்கப்பட உள்ளது.
இதற்கு ஆண்டுக்கு, 64.73 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கான உணவை, 'புட் ஸ்வீங் என்டர்பிரைசஸ்' நிறுவனம் தயாரித்து வினியோகிக்க உள்ளது.

