sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பை இடித்த விவகாரம் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

/

விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பை இடித்த விவகாரம் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பை இடித்த விவகாரம் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்பை இடித்த விவகாரம் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்


ADDED : ஜூலை 13, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :

நெடுஞ்சாலைத் துறை நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்தை, உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் இடித்ததால், பாதிக்கப்பட்டவருக்கு தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்துாரில், திருநீர்மலை -- திருமுடிவாக்கம் சாலையில், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்றும்படி, நடராஜன் என்பவருக்கு நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் தராமல், உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியது.

மேலும், அவரது விளக்கத்தை பெற்ற பின், தகுந்த முடிவை எடுக்குமாறு, கடந்தாண்டு செப்., 3ல், நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடராஜன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில், 'உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது' என, தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

'நெடுஞ்சாலை துறை சட்டப்படி, 'நோட்டீஸ்' அனுப்பிய பின் தான் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். இந்த நடைமுறையை பின்பற்றாமல், மனுதாரரின் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூட, ஆக்கிரமிப்பு கட்டடம் இடிக்கப்பட்டு விட்டது என, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக, எட்டு வாரங்களில் தமிழக அரசு வழங்க வேண்டும்.

'சட்ட நடைமுறையை பின்பற்றாமல், சட்டத்தை தங்கள் கையில் எடுத்து கொண்டு செயல்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் இருந்து, இந்த தொகையை அரசு வசூலித்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us