sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நம்ம ஊர் பெண்களின் மகிழ்ச்சி 'தமிழ் முகம்' புகைப்பட கண்காட்சி

/

நம்ம ஊர் பெண்களின் மகிழ்ச்சி 'தமிழ் முகம்' புகைப்பட கண்காட்சி

நம்ம ஊர் பெண்களின் மகிழ்ச்சி 'தமிழ் முகம்' புகைப்பட கண்காட்சி

நம்ம ஊர் பெண்களின் மகிழ்ச்சி 'தமிழ் முகம்' புகைப்பட கண்காட்சி


ADDED : ஜன 20, 2025 02:33 AM

Google News

ADDED : ஜன 20, 2025 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கேரளாவைச் சேர்ந்தவர் நியா ஜெரா. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பயணம் செய்து, அது தொடர்பாக கட்டுரை எழுதுவதும், புகைப்படம் எடுப்பதும் பிடித்த பொழுதுபோக்கு.

தமிழகத்தில் பயணம் செய்தபோது எடுத்த பெண்களின் புகைப்படங்களை தொகுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், 'தமிழ் முகம்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் உழைக்கும், தெருவோர வியாபரம் செய்யும் பெண்களின் முகங்களை பதிவு செய்துள்ளார், ஒவ்வொரு முகத்திலும் வறுமையைத் தாண்டிய மகிழ்ச்சியும், நம்பிக்கையும் தெரிகிறது.

கண்காட்சி குறித்து, நியா கூறுகையில், ''உலகின் மிகப்பழமையான நாகரிங்கள் நிறைந்து விளங்கும் பிரதேசங்களில் தமிழகமும் ஒன்று. கலை, இலக்கியம், பராம்பரியம் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்ட கலாச்சார மையமாக, தமிழகம் சிறப்புற்று விளங்குகிறது.

''தமிழகத்தின் இளமை துடிப்பு மொழியில், இசையில், நடனத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. விருந்தோம்பல், மனிதாபிமானம் மற்றும் இயற்கையை நேசிக்கும் மாமனிதர்கள் நிறைந்த இந்த மண்ணில், நான் எடுத்த பெண்களின் புகைப்படங்களை தொகுத்துள்ளேன்,'' என்றார்.

கண்காட்சி வரும் 23 ஆம் தேதி வரை நடைபெறும். காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பார்க்கலாம். அனுமதி இலவசம்.






      Dinamalar
      Follow us