sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது

/

வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது

வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது

வாலிபரை ராடால் அடித்து மொபைல் பறித்தவர் கைது


ADDED : நவ 03, 2024 12:32 AM

Google News

ADDED : நவ 03, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மெரினா லுாப் சாலையில் நடந்து சென்ற வாலிபரை வழிமறித்து, இரும்பு ராடால் தாக்கிவிட்டு, மொபைல் போன் பறித்துச் சென்ற இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பத்துார், திருமுல்லைவாயலை சேர்ந்தவர் கருடகுமார், 20. கடந்த, 28ம் தேதி அன்று மாலை, 5:30 மணியளவில், மெரினா லுாப் சாலையில் நடந்து சென்றார்.

அப்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, சிறிய அளவிலான இரும்பு ராடால் தலையில் தாக்கிவிட்டு, அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த, மொபைல் போன், பணத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

தலையில் ரத்தம் சொட்டிய நிலையில், மெரினா காவல் நிலையத்தில், கருடகுமார் புகார் அளித்தார். உடனே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் என்பதால், வழக்கு விசாரணை அங்கு மாற்றப்பட்டது.

தீவிர விசாரணையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அஜய், 20 என்பவர் மொபைல் பறித்ததும், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் தங்கி, மாடி ரயிலில் மொபைல் போன் கவர் விற்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us