ADDED : பிப் 22, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராயபுரம், சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்தவர் ஷர்மிளா, 28. இவரது வீட்டிற்கு நேற்று கொசு மருந்து அடிக்கும் பணிக்கு மாநகராட்சி zஒப்பந்த ஊழியராக வேலை பார்க்கும் தினகரன், 37 என்பவர் வந்துள்ளார்.
அப்போது, ஷர்மிளா குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷர்மிளா சத்தமிடவே, அருகில் இருந்தவர்கள் தினகரனை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.