ADDED : பிப் 20, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், நேற்று முன்தினம் இரவு, 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, அவர் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் துாக்கி வீசப்பட்ட அந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார், எந்த ஊர் உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை.
போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

