/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வராஹி மீது அடுத்த வழக்கு 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்
/
வராஹி மீது அடுத்த வழக்கு 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்
வராஹி மீது அடுத்த வழக்கு 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்
வராஹி மீது அடுத்த வழக்கு 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்
ADDED : செப் 23, 2024 03:04 AM
எம்.கே.பி.நகர்:வியாசர்பாடி, முல்லை நகர் கிழக்கு அவென்யு சாலையைச் சேர்ந்தவர் சாரதி, 47; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற யு - டியூபர் வராகி, 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வராகி மத்திய அரசில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி வழக்கறிஞர் சாரதி, கடந்த 2023 பிப்., மாதம் 5 லட்ச ரூபாய் வாராஹிக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பணம் கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாகியும், வராஹி 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தராததோடு, 5 லட்ச ரூபாயையும் தராமல் ஏமாற்றியுள்ளார்.
சாரதி பணத்தை திருப்பி கேட்ட போது, வாராஹி தன் கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து, சாரதியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், வராகி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.