sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது

/

முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது

முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது

முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது


ADDED : ஜன 09, 2024 12:40 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி; வழக்கறிஞர். இவர், சென்னை சைபர் கிரைம் போலீசில், கடந்த 5ம் தேதியன்று புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை கொச்சைப்படுத்தி, எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அரசுக்குஎதிராகவும், பொது அமைதியை துாண்டும் வகையில், வீடியோ பதிவிட்டுள்ளார்.

எனவே, சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின்படி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அஞ்சல், மணிபூர் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன், 28, என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்தது தெரிந்தது.

நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us