sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்

/

திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்

திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்

திருடர்கள் இருவரை துரத்தி பிடித்த போலீசார்


ADDED : ஜன 30, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பம்மல், பம்மல் - பொழிச்சலுார் சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, இரண்டு மர்ம நபர்கள், ஜெராக்ஸ், லேப் உள்ளிட்ட நான்கு கடைகளை உடைத்து, பணம், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை திருடி, இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற சங்கர் நகர் போலீசார், நள்ளிரவில் இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வாகனத்தில் செல்வதை பார்த்து, மடக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், மர்ம நபர்கள் வாகனத்தில் பறந்தனர்.

போலீசாரும் விடாமல் துரத்தினர், இதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் அங்கிருந்து தப்பினார். அவரையும் விரட்டிப் பிடித்தனர்.

விசாரணையில், பரங்கிமலையைச் சேர்ந்த கவுதம், 24, ஆன்டர்சன் ஜான், 25, என்பது தெரியவந்தது. கடைகளை உடைத்து பணம், மடிக்கணினி ஆகியவற்றை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us