sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குண்டும் குழியுமான சமயபுரம் பிரதான சாலை தினமும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

/

குண்டும் குழியுமான சமயபுரம் பிரதான சாலை தினமும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

குண்டும் குழியுமான சமயபுரம் பிரதான சாலை தினமும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்

குண்டும் குழியுமான சமயபுரம் பிரதான சாலை தினமும் நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : நவ 16, 2024 12:43 AM

Google News

ADDED : நவ 16, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், போரூர் சுங்கச்சாவடி மற்றும் மவுன்ட் - பூந்தமல்லி சாலையை இணைக்கும் பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளதால் கடும் நெரிசல் தொடர்கிறது.

போரூரில், வானகரம் ஊராட்சி மற்றும் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் எல்லையில், சமயபுரம் பிரதான சாலை உள்ளது.

இது, சென்னை -மதுரவாயல் --- தாம்பரம் பைபாஸ் சாலையில், 2 கி.மீ., தொலைவில், சுங்கச் சாவடிக்கு முன்பாக பிரிந்து, போரூர் --- கிண்டி செல்லும் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இணைகிறது.

இந்த சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இதில், வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமயபுரம் பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இச்சாலை, போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து விடுகிறது.

நேற்று காலையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

எனவே, சாலையை போக்குவரத்திற்கு ஏதுவாக சீர் செய்வதுடன், வாகன நெரிசலை சீர்செய்ய, போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us