/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை
/
அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் தேவை
ADDED : ஜன 18, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாதிரிபேட்டை,
ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டையில், அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில், மூன்று மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, சிந்தாதிரிப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை அகற்றப்பட்டது. வடிகால் பணி முடிவடைந்து ஒன்றரை மாதத்திற்கு மேலாகியும், மீண்டும் நிழற்குடை அமைக்கவில்லை.
நிழற்குடையை மீண்டும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.