ADDED : பிப் 03, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, நேரு நகர், கூட்செட் பகுதியில், கத்தியை காட்டி மிரட்டி, மர்ம நபர் வழிப்பறியில் ஈடுபடுவதாக, அப்பகுதிவாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, வழிப்பறியில் ஈடுபட்ட வியாசர்பாடி, நேரு நகரை சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மாரியை, 34, கைது செய்தனர்.