sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

/

கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்

கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்


ADDED : மே 14, 2025 12:23 AM

Google News

ADDED : மே 14, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர் :கடும்பாடி அம்மன் கோவில், தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவொற்றியூர், காலடிப்பேட்டை, வன்னியர் தெரு - கடும்பாடி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியையொட்டி, அக்னி வசந்த மஹா உற்சவம் நடக்கும்.

அதன்படி, 19ம் ஆண்டு திருவிழா, 2 ம் தேதி பந்தக்காலம் நடும் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 8ம் தேதி, கங்கை திரட்டுதல், காப்பு கட்டுதல், கணபதி பூஜை, தினசரி கரகம் புறப்படுதல் நிகழ்வுகள் நடந்தன. நேற்று முன்தினம் கலை, பால்குட ஊர்வலம் நடந்தது.

முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது.

திருவொற்றியூர் - வடிவுடையம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருளாடி, வீதி உலா வந்தனர். பின், கடும்பாடி அம்மன் கோவில் அருகே, தயாராக இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தொடர்ந்து, அம்மன் புஷ்ப அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். நேற்று, மஞ்சள் நீர் விடையாற்றி மற்றும் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவ சேவையுடன், திருவிழா நிறைவுற்றது.






      Dinamalar
      Follow us