sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'என்கவுன்டர்' செய்தாலும் எதிர்ப்பு இருக்காது: கஸ்துாரி

/

'என்கவுன்டர்' செய்தாலும் எதிர்ப்பு இருக்காது: கஸ்துாரி

'என்கவுன்டர்' செய்தாலும் எதிர்ப்பு இருக்காது: கஸ்துாரி

'என்கவுன்டர்' செய்தாலும் எதிர்ப்பு இருக்காது: கஸ்துாரி


ADDED : டிச 10, 2024 12:41 AM

Google News

ADDED : டிச 10, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அவதுாறு வழக்கில்கைதாகி, ஜாமினில் வெளியே வந்துள்ள நடிகை கஸ்துாரி, நீதிமன்ற உத்தரவுப்படி,எழும்பூர் காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்திட்டார்.

அப்போது, அவரது அளித்த பேட்டி:

ஆதவ் அர்ஜுனாவை வேண்டாம் என, எந்தக்கட்சியும் சொல்லக்கூடியஇடத்தில் இல்லை. எல்லா கட்சியில் உள்ளவர்களுக்கும், மார்ட்டின் குடும்பத்தார் நிதி உதவி செய்துள்ளனர். அரசியலில் எதுவும் நிலையானது கிடையாது.

மனநலம் குன்றிய குழந்தையை, கடவுளுடைய குழந்தையாகத்தான் நாம் பார்க்க வேண்டும். தவறே செய்யாதவர்களை எல்லாம் தனிப்படை வைத்து, காவல் துறையினர் தேடி வருகின்றனர்; நான் என்னை சொல்லவில்லை.

அயனாவரத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை சீரழித்தவர்கள், இன்னும் எப்படி வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டோர் விபரத்தை, காவல் துறை வெளியிட வேண்டும்.

எனக்கு அரசு மீது எந்தவித கோபமும் கிடையாது. மனவளர்ச்சி குன்றிய மாணவியை சீரழித்தோரை என்கவுன்டர் செய்தாலும், அதை மக்கள் எதிர்க்கமாட்டார்கள்.

இவ்வாறு கஸ்துாரி கூறினார்.






      Dinamalar
      Follow us