sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அழகு நிலையத்தில் 'மப்'பில் துாங்கிய திருடன்

/

அழகு நிலையத்தில் 'மப்'பில் துாங்கிய திருடன்

அழகு நிலையத்தில் 'மப்'பில் துாங்கிய திருடன்

அழகு நிலையத்தில் 'மப்'பில் துாங்கிய திருடன்


ADDED : டிச 29, 2024 12:31 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைந்தகரை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், 'கிரீன் டிரெண்ட்ஸ்' அழகு நிலையம் இயங்கி வருகிறது. ஊழியர்கள்

நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது; பொருட்கள் சிதறிக்கிடந்தன. லேப் - டாப் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மாடியில் இருந்து 'கொர்...' என, குறட்டை விடும் சத்தம் கேட்டது.

மாடிக்கு சென்று பார்த்தபோது, மது பாட்டில்களுடன் ஒருவர், 'ஹாயாக' குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி விசாரித்தனர். அதில், சேத்துப்பட்டைச் சேர்ந்த கிஷோர், 24, என்பதும், நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிந்தது. பணம் எதுவும் கிடைக்காத நிலையில், போதையில் மாடியில் துாங்கியது விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us