sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு

/

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு

மூன்றாவது 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு


ADDED : செப் 24, 2025 12:52 AM

Google News

ADDED : செப் 24, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்தின் வரைவு அறிக்கை, வரும் ஜன., 14ல் வெளியிடப்படும்,'' என சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார்.

அப்போது, சேகர்பாபு கூறியதாவது:

கோயம்பேடு சந்தையில் உள்ள, 3,000க்கும் மேற்பட்ட கடைகள் தொடர்பான பராமரிப்பு கட்டணம், விலை நிர்ணய பணிகள் இனி ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.

கோயம்பேடு சந்தை வளாகத்தில், நாளை முதல் அக்., 5 வரை ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் வரைவு அறிக்கை, ஜன., 14ல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us