/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாக்சிங்'கில் திருவொற்றியூர் முதலிடம்
/
'பாக்சிங்'கில் திருவொற்றியூர் முதலிடம்
ADDED : நவ 28, 2024 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்,
புளியந்தோப்பு, டான் பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லுாரியில், மாநில குத்துச்சண்டை போட்டிகள், நவ, 23, 24 ஆகிய தேதிகளில் நடந்தன. தமிழ்நாடு முழுதுமிருந்து, 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சப் - ஜூனியர், ஜூனியர், யூத், சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், திருவொற்றியூரைச் சேர்ந்த ஸ்கொயர் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த, 38 வீரர் - வீராங்கனையர் பங்கேற்று விளையாடியதில், 19 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம் வென்றனர்.
அதன்படி, 76 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினர். வெற்றி பெற்ற அணிக்கு, ஆளுயுரக் கோப்பை, சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டன.