sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்

/

முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்

முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்

முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்


ADDED : மே 17, 2025 12:29 AM

Google News

ADDED : மே 17, 2025 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்,திருவொற்றியூர் குப்பம் பகுதியில், 68 ஏக்கர் பரப்பளவில் சூரை மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 60,000 டன் மீன்கள் கையாள முடியும் என தெரிகிறது. மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள், மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியான, 272 கோடி ரூபாய் செலவில் 2019ல் துவங்கியது.

இதில், தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அலை தடுப்புச்சுவர் மற்றும் சிறிய - பெரிய படகுகள் அணையும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 800 படகுகள் நிறுத்த முடியும். மேலும், மீன் ஏலக்கூடம், வானொலி கோபுரம், மீனவர்கள் ஓய்வறை, கழிப்பறை, உணவு கூடம், பார்க்கிங் யார்டு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

பணிகள் முடிந்தநிலையில், திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா ஏற்பாடுகள், ஏற்கனவே மூன்று முறை நடந்தன.

ஆனால், பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து, நாட்கள் பல கடந்த நிலையிலும், திறப்பு விழாவிற்கான எந்த அறிகுறியும் இல்லை.

சூரை மீன்பிடித்துறைமுகத்தை, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us