sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  

/

பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  

பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  

பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  


ADDED : பிப் 04, 2024 05:22 AM

Google News

ADDED : பிப் 04, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவூறல் உற்சவம் இன்று நடக்கிறது.

திருவிழாக்கள் இல்லாத நாளில் பார்த்தசாரதி பெருமாள் ஆற்றங்கரையில் ஒய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு திருவூறல் உற்சவம் எனப்படுகிறது.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவர் திருவூறல் உற்சவத்தின்போது, திருவல்லிக்கேணியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கலில், அடையாறு ஆற்றங்கரை வரை சென்று திரும்புவார்.

இந்த ஆண்டிற்கான திருவூறல் உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை புறப்பட்டு மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை வழியாக காலை 11:30 மணிக்கு ஈக்காட்டு தாங்கல் ஆற்றங்கரையை சென்றடைகிறார்.

மதியம் அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து மாலை புறப்பட்டு இரவு கோவிலை வந்தடைகிறார். வீதி உலாவின்போது, வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு பெருமாள் தரிசனம் தரும் வகையில் மண்டகப்படி எனும் நடைமுறையும் உள்ளது.

***






      Dinamalar
      Follow us