/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது
/
வேன் ஓட்டுநரை மிரட்டி பணம் பறித்தோர் கைது
ADDED : நவ 19, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆதம்பாக்கம்: வேளச்சேரி, நேரு நகரை சேர்ந்தவர் தேவராஜ், 45. வேன் ஓட்டுநரான இவர், நேற்று முன்தினம், ஆலந்துார் சுரங்கப்பாதை அருகே பொருட்களை டெலிவரி செய்து கொண்டிருந்தார்.
அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர், தேவராஜிடம் வீண் தகராறு செய்து, அவரிடம் இருந்த 2,000 ரூபாயை பறித்து சென்றனர். ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பணம் பறித்து சென்ற, வேளச்சேரியை சேர்ந்த ஆல்வின், 22, ஆதம்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார், 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

