sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

/

மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

1


ADDED : ஜன 22, 2024 01:42 AM

Google News

ADDED : ஜன 22, 2024 01:42 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேசின்பாலம்:சென்னை திருமுல்லைவாயில், முல்லை நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள், 57. இவருக்குச் சொந்தமான வீடு புளியந்தோப்பு, கே.பி.பார்க்கில் உள்ளது.

அவர் இந்த வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான அஸ்கர் அலி, 39, சுரேஷ், 49, ஆகியோர் வாயிலாக, சரளா என்பவருக்கு, 5,000 ரூபாய் மாத வாடகைக்கு விட்டிருந்தார்.

சில மாதமாக வாடகை வராததால், அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் வேறு நபர் குடியிருந்தார். அவரிடம் விசாரித்த போது, அஸ்கர் அலி, சுரேஷ் சேர்ந்து, போலி ஆவணம் வாயிலாக, 2 லட்சம் ரூபாய்க்கு 'லீசு'க்கு விட்டது தெரிந்தது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, குருவம்மாளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரை விசாரித்த பேசின்பாலம் போலீசார், மேற்கண்ட இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us