தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முதியவரை தாக்கிய மூவர் கைது

முதியவரை தாக்கிய மூவர் கைது

முதியவரை தாக்கிய மூவர் கைது


ADDED : அக் 22, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி, ஆவடி, பிருந்தாவன் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ், 68. இவர், ஆவடி அடுத்த சேக்காடு, வி.ஜி.என்., அப்பார்ட்மென்ட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, அப்பார்ட்மென்ட் அருகே, காலி இடத்தில் நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அதை, தன்ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், அவரை சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றனர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், ஆவடி தேவி நகரைச் சேர்ந்த அருண், 22, காமராஜர் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 19, சோழவரத்தைச் சேர்ந்த விக்கி, 23, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us