sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபரை குளியல் அறையில் தள்ளி தாக்கி 31 சவரன் நகைகள் திருடிய மூவர் சிக்கினர்

/

வாலிபரை குளியல் அறையில் தள்ளி தாக்கி 31 சவரன் நகைகள் திருடிய மூவர் சிக்கினர்

வாலிபரை குளியல் அறையில் தள்ளி தாக்கி 31 சவரன் நகைகள் திருடிய மூவர் சிக்கினர்

வாலிபரை குளியல் அறையில் தள்ளி தாக்கி 31 சவரன் நகைகள் திருடிய மூவர் சிக்கினர்


ADDED : மே 17, 2025 12:09 AM

Google News

ADDED : மே 17, 2025 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வியாசர்பாடி, வியாசர்பாடி, எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் ஹித்தேஷ், 26. இவரது பெற்றோர், உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்றிருந்தனர்.

வீட்டில் தனியாக இருந்த ஹித்தேஷ், 'கிரிண்டர்' செயலி வாயிலாக, ஏற்கனவே பழக்கமான நண்பர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

கடந்த 14ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில், ஹித்தேஷ் வீட்டிற்கு, 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள், ஒரு இளம்பெண் என, மூன்று பேர் ஆட்டோவில் வந்துள்ளனர்.

மூவரும் ஹித்தேஷ் உடன் நெருக்கமாக சிறிது நேரம் பேசியுள்ளனர். திடீரென மூவரும் ஹித்தேஷை தாக்கி, குளியல் அறையில் கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த 31 சவரன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடி தப்பினர்.

இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்தனர்.

இதில், வியாசர்பாடி 13வது குறுக்கு தெருவைச் சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜெயந்திநாதன், 35, அம்பத்துார், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அய்யப்பன், 34, மற்றும் 17 வயது சிறுமி உட்பட மூவர், சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. விழுப்புரத்தில் பதுங்கி இருந்த மூவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 சவரன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us