sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இருவரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட மூவர் கைது

/

இருவரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட மூவர் கைது

இருவரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட மூவர் கைது

இருவரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட மூவர் கைது


ADDED : ஜன 09, 2024 12:25 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், 'டாஸ்மாக்' கடையில் போதையில் தகராறு செய்து, இருவரை கத்தியால் வெட்டிய சிறுவன் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன், 40; பெயின்டர். இவர், நேற்று அயனாவரம் சந்தை அருகிலுள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்த சென்றார்.

அங்கு, அதிக போதையில் இருந்த மூன்று வாலிபர்கள், ஜான்சனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். பணம் தர மறுக்கவே, அவரை கத்தியால் வெட்டிவிட்டு வெளியே வந்தனர்.

இதேபோல், அயனாவரம் சந்தை அருகில், சாலையில் நின்ற அதே பகுதியைச் சேர்ந்த சுஜித், 19, என்பவரிடம், மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவரும் தர மறுத்ததால், அவரையும் கத்தியால் வெட்டிவிட்டு, சந்தையில் இருந்த மக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். காயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரித்து, அயனாவரத்தைச் சேர்ந்த சரவணன், 18, ஆபில், 18, மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us