/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிளஸ் 2 மாணவரை தாக்கிய மூன்று சிறுவர்கள் கைது
/
பிளஸ் 2 மாணவரை தாக்கிய மூன்று சிறுவர்கள் கைது
ADDED : டிச 14, 2024 02:45 AM
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவனிடம், அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவன், அடிக்கடி வீண் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிளஸ் 2 மாணவனின் தந்தை, பள்ளி நிர்வாகத்திடம் சம்பவத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவரை எச்சரித்து அனுப்பி உள்ளது.
இதை மனதில் வைத்து, பள்ளி முடிந்து பிளஸ் 2 மாணவர் வீட்டிற்கு சைக்கிளில் செல்லும்போது, பிளஸ் 1 மாணவன், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, ராயப்பேட்டை, நல்லெண்ணை தெருவில் வழிமறித்து தாக்கி உள்ளனர்.
இதில், பிளஸ் 2 மாணவருக்கு முதுகு, கண்ணுக்கு கீழ் பகுதி, விலா எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
இது குறித்து விசாரித்த ராயப்பேட்டை போலீசார், பிளஸ் 1 மாணவர் உட்பட மூவரையும் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.