தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிளஸ் 2 மாணவரை தாக்கிய மூன்று சிறுவர்கள் கைது

பிளஸ் 2 மாணவரை தாக்கிய மூன்று சிறுவர்கள் கைது

பிளஸ் 2 மாணவரை தாக்கிய மூன்று சிறுவர்கள் கைது


ADDED : டிச 14, 2024 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 02:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவனிடம், அதே பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவன், அடிக்கடி வீண் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிளஸ் 2 மாணவனின் தந்தை, பள்ளி நிர்வாகத்திடம் சம்பவத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட மாணவரை எச்சரித்து அனுப்பி உள்ளது.

இதை மனதில் வைத்து, பள்ளி முடிந்து பிளஸ் 2 மாணவர் வீட்டிற்கு சைக்கிளில் செல்லும்போது, பிளஸ் 1 மாணவன், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, ராயப்பேட்டை, நல்லெண்ணை தெருவில் வழிமறித்து தாக்கி உள்ளனர்.

இதில், பிளஸ் 2 மாணவருக்கு முதுகு, கண்ணுக்கு கீழ் பகுதி, விலா எலும்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்த ராயப்பேட்டை போலீசார், பிளஸ் 1 மாணவர் உட்பட மூவரையும் கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us