sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி

/

காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி

காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி

காஸ் கசிந்து தீ விபத்து காயமடைந்த மூவரும் பலி


ADDED : பிப் 12, 2025 12:48 AM

Google News

ADDED : பிப் 12, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார், 62; கூலி தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி, 57; வீட்டு வேலை செய்பவர்.

கடந்த 4ம் தேதி, வீட்டில் சமையல் காஸ் சிலிண்டர் தீர்ந்துள்ளது. பின், புதிய சிலிண்டரை மாற்றியுள்ளார்.

அப்போது, காஸ் கசிவாகி வீடு முழுக்க பரவி இருந்துள்ளது. இதை அறியாமல், பூஜை அறையில் விளக்கு ஏற்றிய லட்சுமி மீது தீப்பற்றியது.

லட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்து காப்பாற்ற முயன்ற வீரக்குமாரும், அவரது மருமகன் குணசேகரன், 45, என்பவரும் தீயில் சிக்கினர்.

இதில், 70 சதவீதம் காயமடைந்த மூவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மூவரும், நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us