sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மொபைல் போன் பறிப்பு மேலும் மூன்று பேர் கைது

/

மொபைல் போன் பறிப்பு மேலும் மூன்று பேர் கைது

மொபைல் போன் பறிப்பு மேலும் மூன்று பேர் கைது

மொபைல் போன் பறிப்பு மேலும் மூன்று பேர் கைது


ADDED : ஏப் 08, 2025 11:47 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த மாதம், 28 ம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே, ஐ.பி.எல்., போட்டி நடந்தது.

இதில், 34,000 ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து, போட்டியை பார்த்து ரசித்தனர்.

போட்டி முடிந்து வெளியேறியபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பலரிடம், மர்ம நபர்கள் மொபைல் போன்களை திருடிச் சென்றனர்.

மொபைல் போன் திருடர்களை பிடிக்க, திருவல்லிக்கேணி குற்றப்பிரிவு ஆய்வாளர் யுவராஜ் தலைமையில், இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் விசாரித்து, கடந்த 1ம் தேதி,, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, நான்கு சிறுவர்கள் உட்பட எட்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 39 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஷாகினி, 30, ராகுல்குமார், 24, மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 31 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us