sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது

/

வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது

வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது

வறுமையால் குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேர் கைது

1


ADDED : ஜூலை 27, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:09 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குழந்தையை விற்க முயன்ற தாய் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

புழல் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 32; இ - சேவை மையத்தில் பணிபுரிகிறார். நான்கு மாதங்களுக்கு முன், புழல், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமானார்.

தீபாவிடம் அவரது தோழியரான வித்யாராணி மற்றும் ரதிதேவி ஆகியோர், 'குழந்தையை யாரிடமாவது விற்றுத்தர முடியுமா?' எனக் கேட்டுள்ளனர்.

இது குறித்து, கார்த்திக் என்பவரிடம் தீபா தெரிவித்து உள்ளார். உண்மை அறிய, கார்த்திக் வித்யாராணியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வித்யாராணி 12 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார்.

இது குறித்து புழல் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புழல் போலீசாரின் விசாரணையில், வித்யா ராணியின் தோழியான ரதிதேவி, கணவர் துணையின்றி குழந்தையுடன் வறுமையில் வாழ்ந்து வந்ததும், அதனால் குழந்தையை விற்க முயன்றதும் தெரிய வந்துது.

இதையடுத்து வித்யாராணி, 36, தீபா, 38, மற்றும் ரதிதேவி, 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விற்பனைக்கு கொண்டு வந்த 2 வயது ஆண் குழந்தையையும், வித்யாராணி வீட்டில் இருந்த மற்றொரு 2 வயது குழந்தையையும் போலீசார் மீட்டு, குழந்தைகள் நல குழும அலுவலரிடம் ஒப்படைத்து, குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெண்களிடமிருந்து ஐந்து மொபைல் போன்கள், இரண்டு டூ - வீலர் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us