sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.10.55 லட்சம் மோசடி துாத்துக்குடி நபர் கைது

/

ரூ.10.55 லட்சம் மோசடி துாத்துக்குடி நபர் கைது

ரூ.10.55 லட்சம் மோசடி துாத்துக்குடி நபர் கைது

ரூ.10.55 லட்சம் மோசடி துாத்துக்குடி நபர் கைது


ADDED : ஜூன் 05, 2025 12:41 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அரும்பாக்கம், பாலவிநாயகர் நகரைச் சேர்ந்தவர் சரவணன், 43. இவர், கடந்த ஜன., 27ம் தேதி அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றறை அளித்தார்.

அதன் விபரம்:

என் முகநுாலில், 'ஸ்மிருதி சர்மா' என்ற பெயரில் அறிமுகமாகியவர், நண்பராக பழகினார். அவர், மொபைல் போனில் என்னை தொடர்பு கொண்டு, பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்.

அதை நம்பி, 2024 ஆக., 1 முதல், டிச., 2ம் தேதி வரை, 14 பரிவர்த்தனையில் மொத்தம், 10.55 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். அந்த பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை அடிப்படையில், வழக்கில் தொடர்புடைய, துாத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன், 26, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், போலி முகநுால் கணக்கில் பழகி, ஆசை வார்த்தை கூறி, முதலீடிற்காக பணம் வாங்கியதும், வாங்கிய பணத்தை, பல்வேறு வங்கி கணக்கில் அனுப்பியதும் தெரிந்தது. இதற்காக கமிஷன் அடிப்படையில் பலர் செயல்பட்டுள்ளனர்.

வங்கி கணக்கில் கமிஷன் அடிப்படையில் பணம் பெற்ற ரங்கநாதனை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்; வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us