/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புளியந்தோப்பு வழிப்பறி திருடன் கைது
/
புளியந்தோப்பு வழிப்பறி திருடன் கைது
ADDED : ஜூன் 29, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, ஆடுதொட்டி பகுதியில் இறைச்சி வாங்க வருவோரை மிரட்டி பணம் பறிப்பதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் விசாரித்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது, புளியந்தோப்பு, கன்னிகாபுரம், கஸ்துாரிபாய் காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 32, என்பதும், கொலை, கொலை முயற்சி உட்பட, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
கார்த்திக்கை போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.