sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏறுமுகத்தில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 அதிகரிப்பு

/

ஏறுமுகத்தில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 அதிகரிப்பு

ஏறுமுகத்தில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 அதிகரிப்பு

ஏறுமுகத்தில் தக்காளி விலை ஒரே நாளில் ரூ.10 அதிகரிப்பு


ADDED : ஆக 12, 2025 12:33 AM

Google News

ADDED : ஆக 12, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு, தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் கிலோ 10 ரூபாய் அதிகரித்து, 60 ரூபாய்க்கு விற்பனையானது.

கோயம்பேடு சந்தைக்கு கிருஷ்ணகிரி, ஓசூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரை, தினமும் 1,300 டன் தக்காளி தேவை உள்ளது. சமீபமாக, அவ்வப்போது பெய்து வரும் மழையால், தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் கோயம்பேடு சந்தைக்கு, 900 - 1,000 டன் தக்காளி வந்தது. இதையடுத்து, முதல் ரகம் 50 ரூபாய், இரண்டாம் ரகம் 40 ரூபாய், மூன்றாம் ரகம், 30 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று 800 டன் தக்காளி மட்டுமே வந்தது. இதையடுத்து, கோயம்பேடு சந்தை மொத்த விற்பனையில், ஒரே நாளில் கிலோவிற்கு 10 ரூபாய் அதிகரித்து, முதல் ரகம் 60; இரண்டாம் ரகம் 50 ரூபாய், மூன்றாம் ரகம் 40 ரூபாய் என, விற்பனையானது.

சில்லரை விற்பனையில், ஒரு கிலோ தக்காளி 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.






      Dinamalar
      Follow us