/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ பணி அடையாறில் போக்குவரத்து மாற்றம்
/
மெட்ரோ பணி அடையாறில் போக்குவரத்து மாற்றம்
ADDED : அக் 25, 2024 12:43 AM
சென்னை, அடையாறு பகுதியில் மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், 26, 27 ஆகிய இரு நாட்கள், சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கி வரும் வாகனங்கள், அடையாறு பேருந்து பணிமனை சந்திப்பில், காந்தி நகர், 2வது குறுக்கு தெரு வழியாக செல்ல வேண்டும்.
பின், ராமச்சந்திரா ஆதித்தனார் சாலையில் வலது புறம் திரும்பி, தேஸ்முக் துர்காபாய் சாலையை அடைந்து, இடது புறமாக திரும்பி திரு.வி.க., பாலம் வழியாக செல்லலாம்.
ஒரு வழிச்சாலையாக இருந்த அடையாறு மேம்பாலம், இரு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
திரு.வி.க., பாலத்திலிருந்து அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர், ஓ.எம்.ஆர்., மற்றும் மத்திய கைலாஷ் செல்லும் வாகனங்களுக்கு, எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
எஸ்.வி., பட்டேல் சாலையிலிருந்து எல்.பி., சாலை வழியாக அடையாறு, திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் செல்லும் வாகனங்களுக்கும், எவ்வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.
எல்.பி., சாலை வழியாக கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் மற்றும் கிண்டி நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கும், எவ்வித மாற்றமும் இல்லை.
பெசன்ட் நகரிலிருந்து கிரீன்வேஸ் சாலை, மெரினா கடற்கரை மற்றும் மயிலாப்பூர் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

