sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி

/

மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி

மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி

மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி


ADDED : நவ 30, 2024 12:35 AM

Google News

ADDED : நவ 30, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிபேட்டை, சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில், பழமையான மீன் அங்காடி உள்ளது. இங்கு சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கானோர் மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

மீன் அங்காடிக்கு அருகில் உள்ள தெருக்களிலும் மீன் கடைகள் அதிகரித்துள்ளன. இங்கு மீன்கள் வாங்க வருவோருக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கென இடம் ஏதும் ஒதுக்கப்படாததால், சாலையை ஆக்கிரமித்தே அவற்றை நிறுத்திச் செல்கின்றனர்.

இதனால் தினசரி பீக் ஹவர்ஸ் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

மேற்கு கூவம் சாலை பூங்கா ரயில் நிலையம் அருகே, 2.19 கோடி ரூபாய் செலவில், 1,022 ச.மீ., பரப்பளவில், 102 கடைகளுடன் நவீன மீன் அங்காடி கட்டுமான பணியை, கடந்த ஆண்டு ஜூலை, 10ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்தும், மீன் அங்காடி திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டால் மட்டுமே, அருணாச்சலம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கேட்ட போது, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:

அருணாச்சலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக, எழும்பூரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு வரும் வாகனங்களை மேற்கு கூவம் சாலை வழியாக திருப்பி, போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினோம்.

ஆனால், வாகன ஓட்டிகள் மேற்கு கூவம் சாலையில் நுழைந்து, அருணாச்சலம் சாலையை இணைக்கும் தெருக்கள் வழியாக சென்று வருகின்றனர். இதன் காரணமாகவே நெரிசல் ஏற்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us