ADDED : ஆக 26, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை: மின்ட் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவகுமார், 51. இவர், தண்டையார்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று வீட்டில் யாரும் இல்லாத, நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தண்டையார்பேட்டை போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.