தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புற்களில் தீ பற்றியதால் ரயில் சேவை பாதிப்பு

 புற்களில் தீ பற்றியதால் ரயில் சேவை பாதிப்பு

 புற்களில் தீ பற்றியதால் ரயில் சேவை பாதிப்பு


ADDED : ஏப் 29, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 02:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கடற்கரை தண்டவாளத்தை ஒட்டியுள்ள புற்கள், தீ பிடித்து எரிந்ததால், மின்சார ரயில் சேவை, 20 நிமிடம் பாதிக்கப்பட்டது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், ரயில்வே பணிமனை உள்ளது. இங்கு தண்டவாளத்தை ஒட்டியுள்ள காய்ந்த புற்களில், நேற்று மாலை 4:30 மணிக்கு, திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது.

தீ மளமளவென 30 மீட்டருக்கு பரவியது. இதையறிந்த ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள், தீயை அணைத்தனர். இதனால் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. தீயால், கடற்கரை - தாம்பரம் இரு வழித்தடங்களில், 20 நிமிடங்களுக்கு மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us