sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திருநங்கையர் தொல்லை ரயில்களில் அதிகரிப்பு

/

திருநங்கையர் தொல்லை ரயில்களில் அதிகரிப்பு

திருநங்கையர் தொல்லை ரயில்களில் அதிகரிப்பு

திருநங்கையர் தொல்லை ரயில்களில் அதிகரிப்பு


ADDED : செப் 16, 2025 01:18 AM

Google News

ADDED : செப் 16, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை;மின்சார ரயில்களில் பயணிப்போரிடம் பணம் கேட்டு, திருநங்கையர் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை, புறநகரில் 450க்கும் மேற்பட்ட நடைகளில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களில் ஏறும் திருநங்கையர், பயணியரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்.

குறிப்பாக, வடமாநில தொழிலாளர்களின் சட்டை பையில் இருந்து பணம் எடுப்பது, பணம் தராதவர்களை அநாகரிகமாக பேசுவது, உடல் ரீதியாக தொந்தரவு செய்வது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சில நாட்களுக்கு முன், சைதாப்பேட்டையில் சென்றுகொண்டிருந்த மின்சார ரயிலில் பணம் தராத வாலிபரை, ஒரு திருநங்கை தலையில் அடித்தது சர்ச்சையானது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருவதால், மின்சார ரயில்களில் பயணிப்போர் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கின்றனர்.

மின்சார ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

ரயிலில் ஏறும் திருநங்கையர், பணம் கேட்டு தகராறு செய் கின்றனர். குறிப்பாக வாலிபர்களிடமும், குழந்தைகளுடன் வரும் தம்பதியரிடமும் பணம் கேட்டு தொல்லை தருகின்றனர். ரயில் பயணியர் சங்கம் சார்பில், ரயில்வே போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சில மாதங்களாகவே திருநங்கையரின் அட்டகாசம் எல்லை மீறி அடிதடியாக மாறி வருகிறது. ரயில்வே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us