sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்

/

வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்

வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்

வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்த திருச்சி நபர் சிக்கினார்


ADDED : நவ 06, 2025 02:37 AM

Google News

ADDED : நவ 06, 2025 02:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் போலி வரைவோலை தயாரித்து, 1.47 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பலில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி, மணச்சநல்லுாரைச் சேர்ந்தவர் அன்பழகன், 42; மரக்கடை வியாபாரி. இவர், கடந்த 2023ல், கொளத்துாரில் உள்ள நிர்மல் - வர்ஷா தம்பதியின் 'அக்குபஞ்சர்' கிளினிக்கில் சிகிச்சைக்காக வரும்போது, அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வாயிலாக, சந்துரு, குணசேகரன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர்.

ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, அன்பழகன், எஸ்.பி.ஐ., வங்கி பெயரில் 2023 ஜூலை 7ம் தேதியிட்டு, 1.47 கோடி ரூபாய்க்கு போலி வரைவோலை தயார் செய்துள்ளார்.

அதை சந்துருவிடம் கொடுத்து, அவரது பெயரில் செங்குன்றத்தில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் செலுத்தி உள்ளனர். மயிலாப்பூரில் உள்ள வங்கி கிளையில் அந்த வரைவோலையை சோதனை செய்தபோது, அது போலி என தெரிந்தது.

இதுகுறித்து, செங்குன்றம் ஹெச்.டி.எப்.சி., வங்கி கிளை மேலாளர் டெரிக் லெஸ்லி ஸ்டீவன்ஸ், கடந்தாண்டு ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

விசாரித்த இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த திருச்சியைச் சேர்ந்த அன்பழகனை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே சந்துரு, குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், நிர்மல் - வர்ஷா தம்பதியை, போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us