ADDED : மார் 08, 2024 12:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பட்டாபிராம், திருநின்றவூரைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு, ஆன்லைன் வாயிலாக அரியலுார் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த அருண்குமார், 24 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் சீண்டலில் அருண்குமார் ஈடுபட்டு உள்ளார்.
ஓராண்டாக சிறுமியிடம் 1 சவரன் நகை மற்றும் சிறுமியின் அம்மாவின் ஏ.டி.எம்., கார்டில் சிறுக சிறுக 50,000 ரூபாய் பெற்றுள்ளார்.விபரம் அறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் படி, பட்டாபிராம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து அருண் குமாரை தேடி வருகின்றனர்.

