sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்

/

ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்

ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்

ஒப்பந்த நிறுவனம் அலட்சியம் இருளில் மூழ்கும் சுனாமி நகர்


ADDED : டிச 31, 2024 12:31 AM

Google News

ADDED : டிச 31, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, சுனாமி நகரில், 6,700 வீடுகள் உள்ளன. இந்த பகுதி, செம்மஞ்சேரி கால்வாயை ஒட்டி உள்ளதால், வெள்ள பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க, 45 கோடி ரூபாயில் வடிகால் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.

இதற்காக பள்ளம் தோண்டும்போது, குடிநீர், கழிவுநீர் குழாய்கள் மற்றும் தெருவிளக்கு கேபிள்கள் சேதமடைந்தன.

இந்த பகுதியில், 50க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இதன் கேபிள்கள், பல தெருக்களில் சேதமடைந்தன.

அதை, வடிகால் கட்டிய நிறுவனம் சீரமைத்து கொடுக்காததால், 30க்கும் மேற்பட்ட தெருக்கள் இருளில் மூழ்கியுள்ளன.

இதர தெருக்களிலும், பல கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை. சுனாமி நகர் முழுதும் இருளில் மூழ்கியதால், வழிப்பறி, திருட்டு அச்சத்தில் உள்ளனர்.

அசம்பாவிதம் நடைபெறும் முன், அனைத்து விளக்குகளும் எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us