தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்

குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்

குண்டாசில் சிறை சென்றும் திருந்தாத 'டூ - வீலர்' திருடன்


ADDED : பிப் 18, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணா நகர் : அண்ணா நகர் 6வது அவென்யூவைச் சேர்ந்தவர் வீராசாமி, 49; ஹோட்டல் ஊழியர். கடந்த 10ம் தேதி ஹோட்டல் அருகே, இவரது, 'ஹோண்டா ைஷன்' பைக் திருடுபோனது.

இது குறித்த புகாரின்படி, அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர். இதில், பைக்கை திருடியது, அயனாவரத்தைச் சேர்ந்த ரமேஷ், 45, என்பது தெரிய வந்தது.

அம்பத்துார், கள்ளிக்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை, போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

இது குறித்து அண்ணா நகர் தனிப்படை போலீசார் கூறியதாவது:

அண்ணா நகரில் மட்டுமின்றி, ஓட்டேரி, பூந்தமல்லி, குன்றத்துார், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பல இடங்களில், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை, ரமேஷ் திருடி விற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

போரூரில், கடந்த 2020ல் சிக்கிய ரமேஷிடம் இருந்து 38 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை முடிந்து, மீண்டும் வெளியில் வந்தவர், மீண்டும் திருட்டு வழக்கில் வில்லிவாக்கம் போலீசாரிடம் சிக்கினார். 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இருந்தும் திருந்தாத ரமேஷ், மீண்டும் கைவரிசை காட்ட அண்ணா நகர் போலீசாரிடம் சிக்கி உள்ளார்; எட்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹே எப்புட்றா?

ரமேஷ் பைக் திருடுவதற்கு சில டெக்னிக்குகள் கையாண்டுள்ளார். பயன்படுத்திய பொருட்களை வாங்கவும், விற்கவும் செய்யும் 'ஆன்லைன்' சேவை தளமான ஓ.எல்.எக்ஸ்.,சில் மிக குறைந்த விலைக்கு வரும் வாகனங்களை பார்த்து வாங்குவார். பின், அதே வாகனம் அதே கலரில் உள்ள புது வாகனங்களை தேடி அலைவார். அப்படி ஒரு வாகனம் கண்ணிற்கு பட்டால், சில நாட்கள் நோட்டமிட்டு தருணம் பார்த்து திருடிச்செல்வார். பின் 'நம்பர் பிளேட்' மாற்றி ஓ.எல்.எக்ஸ்.,சில் வாங்கிய வாகனத்தின் ஆர்.சி., புக்கை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்று, கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us