sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு கூடுதல் ஏசி' பெட்டிகள்

/

இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு கூடுதல் ஏசி' பெட்டிகள்

இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு கூடுதல் ஏசி' பெட்டிகள்

இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரு கூடுதல் ஏசி' பெட்டிகள்


ADDED : பிப் 02, 2025 08:40 PM

Google News

ADDED : பிப் 02, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வடக்கு ரயில்வே இரண்டு இக்ஸ்பிரஸ் ரயில்களில், நிரந்தரமாக ஏசி' பெட்டிகளை இணைத்துள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதின் செல்லும், ஹஜ்ரத் நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், ஒரு முதல் வகுப்பு ஏசி' பெட்டியும், ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி' பெட்டியும் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.

இது, ஹஜ்ரத் நிஜாமுதினில் இருந்து, வரும் 4ம் தேதி முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து, வரும் 7ம் தேதி முதலும் அமலாக உள்ளது.

அதேபோல், திருவனந்தபுரத்தில் இருந்து, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதின் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், நிரந்தரமாக ஒரு முதல் வகுப்பு ஏசி' மற்றும் ஒரு மூன்றாம் வகுப்பு ஏசி' பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இது, நிஜாமுதினில் இருந்து, 4ம் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும் 6ம் தேதி முதலும் அமலாக உள்ளது.






      Dinamalar
      Follow us