ADDED : பிப் 20, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, வியாசர்பாடி, உதயசூரியன் நகர் 10வது பிளாக்கைச் சேர்ந்தவர் மதன், 30; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு, 27. இவர்களுக்கு 2 வயதில் அகிலன் என்ற மகன் உள்ளார்.
கடந்த 14ம் தேதி, பகுதியில் ரகளையில் ஈடுபட்ட மதுபோதை கும்பல், மதன், அம்மு மற்றும் குழந்தையை தாக்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.
எம்.கே.பி.நகர் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த உதயசூரியன் நகர், 11வது பிளாக்கை சேர்ந்த இமானுவேல், 30, சாமுவேல், 34, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

