ADDED : ஜூன் 13, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி, வேளச்சேரி, நேதாஜி நகரில் கண்ணபிரான் என்ற கோவில் உள்ளது. இரு தினங்களுக்கு முன், இந்த கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து இரண்டு பேர் பணம் திருடினர்.
வேளச்சேரி போலீசாரின் விசாரணையில், ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வினோத், 25, மாதவன், 29, என தெரிந்தது. நேற்று, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.