sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு 'காப்பு'

/

தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு 'காப்பு'

தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு 'காப்பு'

தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 12, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே, மண்ணடி, சவரிமுத்து தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 23; மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன், பிராட்வே, டேவிட்சன் தெருவில் ஏழுமலை நடந்து சென்றபோது, அவ்வழியே மீன்பாடி வண்டி ஓட்டி வந்த மகாதேவன் என்பவர், ஏழுமலை மீது வேகமாக மோதியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மகாதேவனின் நண்பர் மோகனும் ஏழுமலையை தாக்கினார்.

இந்த நிலையில், ஏழுமலை நேற்று முன்தினம் நள்ளிரவு, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, மகாதேவன் மற்றும் மோகன், வீண் வம்பிழுத்துள்ளனர். மேலும், ஏழுமலையை மதுபாட்டிலால் மண்டையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை, அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த எஸ்பிளனேடு போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, பிராட்வே, கொண்டிதோப்பு தெருவைச் சேர்ந்த மகாதேவன், 40, டேவிட்சன் தெருவைச் சேர்ந்த மோகன், 55, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us