/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தி முனையில் பணம் பறித்த இருவர் கைது
/
கத்தி முனையில் பணம் பறித்த இருவர் கைது
ADDED : மார் 20, 2026 04:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயிரம்விளக்கு: ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையைச் சேர்ந்தவர் மதன்குமார், 22. 'வாட்டர்வாஷ்' கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நுங்கம்பாக்கம் மூர்ஸ் சாலை - சுதந்திரா நகர் வழியாக, கடந்த 18ல் நடந்து சென்றார். அவருக்கு தெரிந்தவர்களான ஷாம்பிரசாத், 18, ஏசுதாஸ், 25, ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் பேசி, கத்தி முனையில், 1,200 ரூபாயை, அவரிடம் இருந்து பறித்துச் சென்றனர்.
ஆயிரம்விளக்கு போலீசார், பணம் பறிப்பில் ஈடுபட்ட இருவரை நேற்று கைது செய்தனர். இதில், ஷாம்பிரசாத் மீது இரு குற்ற வழக்குகள் உள்ளன.

